வியாழன், 26 மார்ச், 2009

எங்கே செல்லும் இந்த பாதை,அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும்குரல்


எங்கே செல்லும் இந்த பாதை - இந்த பதிப்பு புதினம்.காமில் இருந்து வெளி இடபட்டது. எம் மக்களுக்காக இந்த கடிதம் என்னால் முடிந்த வரை எல்லாதமிழர்களையும் சென்றடைய வேண்டும் என விரும்பி இந்த முயற்சி. இந்தகடிதம் உண்மையான ஒரு ஈழ தமிழரின் மன குமறல்.

அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும்குரல்

[வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2009, 06:35 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும்என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும்அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும்கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும்செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரியநாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்டஒரு கடிதம்.


எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில்துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயேஇவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு:

நா.தயாபரன்.
இரட்டைவாய்க்கால்,
முல்லைத்தீவு.
26.03.2009

எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுங்கள்

அன்புடையீர்!

சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் ஏனைய செய்தி ஊடகங்களும் எம்தொடர்பாக வெளியிடும் செய்திகளையும் கருத்துக்களையும்செயற்பாடுகளையும் கேட்கும்போது ஆடு வெட்டுபவனின் முன்னால் நிற்கும்ஆட்டின் மனநிலையில் துடிக்கின்றோம். எமது உணர்வுகளை புரிந்துகொள்ளயாரும் இல்லையா?

எனது மனது எமது உண்மை நிலையை அவர்களுக்கு தெரியப்படுத்த வேணும்எனத் துடிக்கும். ஆனால் எந்த வழியும் இல்லை. அதனால் மன ஆறுதலுக்காகஎழுதிவிட்டு கிழித்தெறிவேன். இதையும் கடும் மனப்பாரத்துடன் எழுதஆரம்பிக்கின்றேன். யாருடைய காலைப்பிடித்தென்றாலும் இதை எந்தவழியிலாவது அனுப்ப வேணும் என்ற உறுதியுடன் எல்லாம் வல்லஆண்டவரை மனதில் இருத்தி தொடர்கிறேன்.

கிளிநொச்சியில் அச்சகம் வைத்திருந்து படு பிசியாக இருந்த நான் குறைந்ததுநாற்பது லட்சம் பெறுமதியான அச்சகத்தை உடையார்கட்டுடன் விட்டுவிட்டுஇன்று எட்டாவது இடம்பெயர்வாக இரட்டைவாய்க்கால் எனும் ஊரின்வெளியில் தரப்பால் கொட்டகையில் வெயிலிலும் மழையிலும் வர்ணிக்கமுடியாத துன்பத்தை அனுபவிக்கிறோம். இந்த துன்ப இருளிலிருந்துநிரந்தரமான விடியலை எதிர்பார்க்கின்றோம். இதனைக்கூட எழுதும் போதுமேலே கிபிர் அருகிலெங்கேயோ தாக்குதல் நடத்துகின்றது. பங்கருக்குள்ளேயே வாழ்க்கை.

எல்லா ஊடகங்களின் செய்திகளையும் உள்வாங்கக்கூடியதாக இருந்தும் எமதுமன உணர்வுகளை, பிரச்சினைகளை சர்வதேசம் புரிந்துகொள்ளக்கூடியவகையில் எந்த ஊடகங்களும் எம்மிடையே இல்லை. இங்குள்ள ஊடகங்களைசர்வதேசம் நம்புவதாகவும் இல்லை. சர்வதேசமும் தாம் நம்பக்கூடியஊடகங்களையோ அமைப்புக்களையோ இங்கு அனுப்புவதற்கு போதியமுயற்சி எடுக்கவில்லை.

மாறாக சிங்களம் சொல்பவற்றையும் காட்டுபவற்றையும் மட்டும் கருத்தில்கொண்டு பக்கச்சார்பாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செய்திகளையும்அறிக்கைகளையும் விடுகின்றது. களத்தில் அடிபடும் மக்களாகிய நாம் இந்தஅறிக்கைகளையும் செய்திகளையும் கேட்டு வெந்த புண்ணில் வேல் பாய்வதாகதுடிக்கின்றோம்.

எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்குசெயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம்வெளியேற்றும் போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்றுஇங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிறார்கள். இது எந்தளவு பெரிய நாடகம்.

பரந்து விரிந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் வாழ்ந்தோம். இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இராணுவநடவடிக்கை காரணமாக வாழ்விடங்கள், சொத்துக்கள், சொந்தங்களையெல்லாம் சிதறவிட்டு, திடீரென இராணுவம் ஏவும்எறிகணைக்கும் கிபிர் தாக்குதலுக்கும் சிக்குப்பட்டு உயிருக்கு உத்தரவாதமற்றவாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.

ஏற்படுத்தப்பட்டுள்ள உணவுத் தட்டுபாடும் மருந்துத் தட்டுப்பாடும்அடுத்துவரும் நாட்களில் எப்படியிருக்கப் போகின்றது என்பதை நினைக்கும்போது பயங்கரமாக உள்ளது. எமது இக்கட்டான அவலநிலை தெரிந்திருந்தும்சிங்களத்தின் கபட அரசியலில் சர்வதேசம் அடிபட்டுவிட்டதா? அல்லது ஏதோஒரு காரணத்திற்காக சர்வதேசமும் எமது அழிவை விரும்புகின்றதா? என்றுபுரியவில்லை.

எம்மை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து எடுப்பதாக அரசும்சர்வதேசத்தின் சில நாடுகளும் பல தந்திரோபாயங்களைக் கையாள்கின்றது. அரசின் கட்டுப்பாட்டில் வாழ விரும்பியிருந்தால் சமாதான காலத்திலேயே நாம்வெளியேறியிருக்க முடியும். போரின் மூலம் எமது தொண்டைக்குழியைநெரித்தவாறு நீ இராணுவத்திடம் போ அல்லது சாகடிக்கப்படுவாய் என்று எமதுஉணர்வுகளுக்கு சிறையிட சிங்களமும் சர்வதேசமும் கங்கணம் கட்டிநிற்கின்றன.

சிங்களம் காலம் காலமாக தமிழினத்தை எவ்வாறெல்லாம் ஏமாற்றி அடக்கிவருகின்றது என்பதை நடுநிலையாக இருந்து மனச்சுத்தியுடன் பகுத்தாய்வுசெய்தால் தெரியும். அதன் மூலம் தமிழினம் சிங்களத்துடன் இணைந்து வாழமுடியாது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். இன்றும் எமது உரிமையைமறுத்து அனைத்து சிங்களவர்களும் ஆதரவாக உள்ளார்கள்.

அடிப்படையிலேயே சுயநலமும் பச்சோந்தி மனநிலையும் பதவி வெறியும்உள்ள எமது இனத்திற்காகப் போராட பலர் புறப்பட்டனர். பலநெருக்கடிக்கடிகளையும் துரோகங்களையும் எதிர்கொண்டு இன்றுவரைகொள்கை மாறாது இருப்பவர் வே.பிரபாகரன் மட்டுமே.

ஏனையோர் தமது சுயநலன்களுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை விற்கவும்துணிந்து விட்டனர். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று உள்ளது என்பதைஉலகு திரும்பிப்பார்ப்பதற்கு வே.பிரபாகரனே காரணம். எமது இனத்தின்பச்சோந்தி தலைவர்களைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதற்கு பலதந்திரோபாயங்களை சிங்களம் கையாள்கின்றது. இப்பச்சோந்தித்தலைவர்களின் இருப்பு பிரபாகரனின் இருப்பிலேயே தங்கியுள்ளது என்பதைபிற்போக்கானவர்கள் இன்னும் உணரவில்லை.

1958-1983 வரை பல இனக்கலவரங்களை தூண்டி எமது இனத்தை சிங்களம்அழித்து வந்தது. 1983 இல் பிரபாகரன் வலுப்பெற்ற பின்னர் வெளிப்படையாகதொடர முடியாமல் இருக்கிறது.

1958-1983 வரை இடம்பெற்ற கலவரத்தை எந்த நாடுகளும் கண்டித்து இங்குள்ளபிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை. இன்றும் அதே நிலைக்கு எம்மைகொண்டுவர சர்வதேசம் முயற்சிக்கிறது. எந்தவித உரிமைகளையும் தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்தின் தந்திரோபாயத்தில் சர்வதேசமும் எடுபட்டுஎல்ரீரீஈ ஆயுதங்களை கையளிக்கச் சொல்வதும் நாங்கள் வாழ விரும்பும்இடத்தை விட்டு சிங்களத்தின் சிறைக்கு எங்களை எடுக்க முயற்சிப்பதும் எமதுஇனத்தை 1983 இற்கு முற்பட்ட காலப் பகுதிக்கு கொண்டு சென்று எம்மைஅழிக்க சர்வதேசம் முன்வந்துள்ளது.

நான் எல்ரீரீஈ செய்வதெல்லாம் சரி என அவர்களுக்காக வாதாட வரவில்லை. அவர்களுடைய இலட்சியம் சரியானது. அதனை நோக்கிச் செல்லும்போது சிலபிழைகளை விட்டிருக்கிறார்கள்தான். பிழைகளை நியாயப்படுத்த மாட்டேன். எமக்கான ஒரு ஜனநாயக ஆட்சி வரும்போது ஒரு சிறந்த நீதியான ஆட்சியைஅவர்கள் அமைப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இந்தத் தலைமுறையுடன் எமக்கு உரிமைகள் தரப்படாமல் ஒருவேளைபோராட்டம் பின்னடைவைச் சந்தித்தாலும் அடுத்த அடுத்த தலைமுறையினர்உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடர்வார்கள்.

நியாயமான ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிக்க சர்வதேசத்தின் பல பக்கஉதவிகளுடன் சிங்கள அரசு மும்முரமாக செயற்படுகின்றது. இதில் பலஉண்மைகள், உயிர்கள் புதைக்கப்படுகின்றன. சிங்களம் எமது நிலைதொடர்பாக படுபாதகமாக பொய்சொல்லி சர்வதேசத்தையும் செய்திநிறுவனங்களையும் முட்டாளாக்குகின்றது. தளத்தில் உள்ள நாங்கள்சிங்களத்தின் உண்மைத் தன்மையை ஆராயாது சர்வதேசமும் செய்திநிறுவனங்களும் எடுபடுவதை அவதானிக்கும் போது அவற்றின்நேர்மைத்தன்மையிலும் ஆற்றலிலும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் எமது பாதுகாப்புக்கு என்னஉத்தரவாதம்? அங்கு நடைபெறும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், அடிமைத்தனங்கள் எத்தனையோ வெளிவராமல் உள்ளது என்பதை உலகுஅறியுமா? பாலியல் சித்திரவதைக்கு உள்ளான எல்லோரும் அதனைவெளியிட்டு தனது எதிர்கால அவமானத்தை தாங்கிக்கொள்ளவிரும்பமாட்டார்கள். அதேபோலதான் பல செய்திகள் அமுக்கப்படுகின்றன.

பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கூட எமது பிரச்சினை தொடர்பாக ஆய்வாளராகபேட்டிக்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொள்கைப்பற்றற்ற பச்சோந்தி தமிழர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின்பின்னணியும் பல கதைகளைச் சொல்லும்.

தயவுசெய்து எமது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். எமது பிரச்சினையைஆராய்ந்து பாருங்கள். ஒருபக்க செய்திகளை மட்டும் கொண்டு பக்கசார்பாகமுடிவெடுக்காதீர்கள். எங்களிடமும் நேரில் வாருங்கள். எங்களிடம்கருத்துக்கள் கேளுங்கள்.

நன்றி.
நா.தயாபரன்.


நன்றி புதினம்.காம்

ஞாயிறு, 1 மார்ச், 2009

கண்ணீர் தேசம்


உண்மை என்னவென்றால் இப்போது இருக்கும் தமிழர் பல பேருக்கு இலங்கையின் வரலாறு சரியாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஊடக செய்திகளின் தவறான சுட்டி காட்டுதல் பெரும்பாலான மக்களை இலங்கையின் வரலாறு பற்றி தவறாகவே எண்ண வைத்து விட்டது. இவர்களை பொறுத்த மட்டில் இலங்கை தமிழர் அனைவரும் புலிகள் தாம். இலங்கை என்ற கண்ணீர் தேசத்தின் வரலாறு அதில் தமிழர் எப்படி படிப்படியாய் இரண்டாம் தர மக்களாய் தள்ள பட்டார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியாது. இன்று இந்த நிலைக்கு ஈழ தமிழர் தள்ளப்பட முதல் காரணமாய் இருந்தவர்கள் மதிப்பிற்குரிய ஆங்கில ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சிங்கள பெரும்பான்மை மக்களின் அடி வருடி தங்கள் ஆட்சியை பாதுகாத்து கொண்டனர். அன்று ஈழ தமிழரின் அடிப்படை வேண்டுகோள்களை செவி மடுத்து அவர்கள் கேட்டு இருந்தால் இன்று எம் மக்கள் இப்படி ரத்தம் சிந்தி இருந்து இருக்க வேண்டி இருக்காது.

இலங்கை என்னும் கண்ணீர் தேசத்தின் வரலாறு ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய ஒன்று. இது என்னால் ஆன சிறிய முயற்சி ஏன் எனில் பெரும்பான்மையான பதிவர்களும் அதை படிப்பவர்களும் இலங்கை பற்றி சரியான வரலாறு தெரியாதவரை அதனை பற்றி எழுதுவதும் அவருக்குள்ளே சண்டை இட்டு கொள்வதும் வருத்ததிற்குரிய ஒன்று. உண்மையில் நம் அனைவரும் இந்தியர் என்பதும் தமிழர் என்பதும் உணர வேண்டிய ஒன்று. இதில் இன வெறி என்பதும் பாசிசம் என்பதும் தவறான கருத்துக்கள்.

இலங்கை - இந்த கண்ணீர் தேசத்தின் உண்மைகளை அறிய வேண்டுமானால் பல நூறு ஆண்டுகளின் முற்பால் நம்ம செல்ல வேண்டியது அவசியமாகிறது. இலங்கை இந்திய நாட்டின் ஒரு பகுதியாய் இருந்ததும் சிங்களர், தமிழர் இருவுரும் நம் மாற்றுருக்கள் என்பதும் உண்மையின் உண்மை. இந்துமா கடலின் நீர் அளவு அதிகமாக இலங்கை என்னும் இந்த தீவு இந்தியாவை விட்டு பிரிந்து சென்றதும் பூலோக படம் படி சரியான கூற்றைத்தான் இருக்க இயலும். நான் சொல்ல போவது என்க்கு தெரிந்த மட்டில் இந்த இலங்கை நம்மிடம் இருந்து பிரித்த பிறகு நடந்தவை.

ராமாயண காலம் தொட்டு இலங்கைக்கும் நமக்கும் தொடர்பு இருந்து வந்ததே உண்மை. பின்பு தமிழ் மன்னர்கள் வரலாறுகளும் இதேயே உரைகின்றன. இலங்கையின் பெருபான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றி வந்தனர் என்பது வரலாறு அவர்களை தன் நாம் சிங்களர் என கூறி வருகிறோம். இருந்தும் தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பரவி இருந்தனர் என்பதே வரலாறு. வடக்கு மற்றும் கிழ்க்கு பகுதிகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமா இருந்தது.

தொடரும்