செவ்வாய், 1 ஜனவரி, 2013


நான்காம் நிலை - பதிவு

உன்னை பார்த்த அந்த நாள் என் விழிகளும் என் இதயமும் 
சண்டையிட்டு கொண்டன யாருக்கு நீ சொந்தமென.

உயிருக்கு உடைமையானவளை உடலுக்கு கூறிட்டு 
கொடுத்தலாகுமா 

உன் பார்வையும் உன் மௌனமும் ஒன்றுகொன்று 
முண்டியடித்தன என் இதயத்தை கிழிபதற்காய்.

உன் ஒரு பார்வையில் என் உடல் அணு பிளந்தாய். 
என் உதிரத்தில் கலந்து உயிரணுதன்னில் நுழைந்தாய்.

இது வரை நான் வென்ற அடையாளமெல்லாம் 
களைந்து நீ கொடுத்தது நான் உன் காதலன் எனும் ஓர் 
அடையாளம்தாம் .

உன்னருகே நான் வந்த பொழுதெல்லாம் உன் உடலறிய அல்ல 
முன்னொரு பொழுதில் நீ மறந்த நம் உயிரறிய.

உயிர் அருகும் அக்காலம் வரை இனி 
உனை தொடரும் விதிதான் பரமன் எனக்கு 
விதித்த அந்த நான்காம் நிலை.














நான்காம் நிலை - குழப்பம் 

துணிந்து இருக்கிறேன் உன்னை 
காண்பதில்லை என்று 
புறக்கண்ணால் உன்னை நோக்காமல் இருக்கலாம்
என் அகக்கண்ணால் எப்படியடி நோக்காமல் இருக்க இயலும். 

புதைந்த எவற்றையும் தோண்டி எடுக்கலாம் 
என் உயிருக்குள் புதைந்த என் ஏந்திழையின் 
கயல்விழியாளின் மயில்னடையாளின் மானிடையாளின் 
நினைவுகளை எந்த அகழ் ஆய்வால் எடுக்க இயலும்.

உயிர் முழுதும் புதைந்தவளை தோண்டி எடுக்க 
இந்த புவியுலகில் ஒரு கருவியும் உளதோ.

உயிர் முழுதும் புதைந்தவளை என் உயிர் 
பிரிந்திட நினைத்தால் அது இம்மண்ணுலகை 
பிரியும் தருணத்திலும் நடக்காது 
இது அறியாத ஒரு மூட நிலை  
 காதல் எனும் அந்த நான்காம் நிலை.