வியாழன், 13 ஜூன், 2013

நான்காம் நிலை


வினாக்களும் கனாக்களும் எனக்காக காத்திருக்க 
அவை அனைத்தும் மறந்து என் ஏந்திழையின் 
வருகைக்காக காத்திருக்கிறேன் தினமும் காலையில் 

முகநூலுக்கு கடவுச்சொல் கொடுத்த என் இறைவா 
என்னவளின் மன நூலினில் நூழைவதற்க்கு ஒரு
சொல் மொழிவீரோ

படிப்பறிவும் பட்டறிவும் உதவவில்லை எனக்கு
என் காதலியின் அறியாத அந்த மனமறிய.
இயற்பியல் வேதியல் உயிரியல் புவியியல்
இவை அனைத்தும் அறிந்த அறிவுக்கு
ஒரு மங்கையின் மனவியல் காண்பரிதோ.

வினாக்களும் கனாக்களும் எனக்காக காத்திருக்க
அவை அனைத்தும் மறந்து உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
இது தான் அந்த நான்காம் நிலை

செவ்வாய், 1 ஜனவரி, 2013


நான்காம் நிலை - பதிவு

உன்னை பார்த்த அந்த நாள் என் விழிகளும் என் இதயமும் 
சண்டையிட்டு கொண்டன யாருக்கு நீ சொந்தமென.

உயிருக்கு உடைமையானவளை உடலுக்கு கூறிட்டு 
கொடுத்தலாகுமா 

உன் பார்வையும் உன் மௌனமும் ஒன்றுகொன்று 
முண்டியடித்தன என் இதயத்தை கிழிபதற்காய்.

உன் ஒரு பார்வையில் என் உடல் அணு பிளந்தாய். 
என் உதிரத்தில் கலந்து உயிரணுதன்னில் நுழைந்தாய்.

இது வரை நான் வென்ற அடையாளமெல்லாம் 
களைந்து நீ கொடுத்தது நான் உன் காதலன் எனும் ஓர் 
அடையாளம்தாம் .

உன்னருகே நான் வந்த பொழுதெல்லாம் உன் உடலறிய அல்ல 
முன்னொரு பொழுதில் நீ மறந்த நம் உயிரறிய.

உயிர் அருகும் அக்காலம் வரை இனி 
உனை தொடரும் விதிதான் பரமன் எனக்கு 
விதித்த அந்த நான்காம் நிலை.














நான்காம் நிலை - குழப்பம் 

துணிந்து இருக்கிறேன் உன்னை 
காண்பதில்லை என்று 
புறக்கண்ணால் உன்னை நோக்காமல் இருக்கலாம்
என் அகக்கண்ணால் எப்படியடி நோக்காமல் இருக்க இயலும். 

புதைந்த எவற்றையும் தோண்டி எடுக்கலாம் 
என் உயிருக்குள் புதைந்த என் ஏந்திழையின் 
கயல்விழியாளின் மயில்னடையாளின் மானிடையாளின் 
நினைவுகளை எந்த அகழ் ஆய்வால் எடுக்க இயலும்.

உயிர் முழுதும் புதைந்தவளை தோண்டி எடுக்க 
இந்த புவியுலகில் ஒரு கருவியும் உளதோ.

உயிர் முழுதும் புதைந்தவளை என் உயிர் 
பிரிந்திட நினைத்தால் அது இம்மண்ணுலகை 
பிரியும் தருணத்திலும் நடக்காது 
இது அறியாத ஒரு மூட நிலை  
 காதல் எனும் அந்த நான்காம் நிலை.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

நான்காம் நிலை





என்னவிது


தொடுதலில் கதைதலில் புரிதலில் இல்லையடி இன்பம்
உணர்தலில் அது உள்ளது.
என் உயிர் அதை உணர்ந்த காரணமாய் என் உடல்
உருகுதடி ஒரு நிலை இல்லாமல் 

என்னவிது என்று நான் கேட்பதுர்க்குள்???

திங்கள், 8 அக்டோபர், 2012

இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்


இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..









நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்

ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மறுபடியும்


மறுபடியும்
அணுஅணுவாய் சாவதன முடிவெடுத்து விட்டால் காதல்
சரியான வழி தான்.