புதன், 25 பிப்ரவரி, 2009

மெல்ல தமிழினி சாகுமோ


மெல்ல தமிழினி சாகுமோ

தமிழனே இன்னும் என்ன செய்ய போகிறாய். இறுதி மூச்சு வரை போராடி ஆயிற்று, மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுமே நடகாதது போல சிங்கள அரக்கன் ராஜபாக்சேவின் அடி வருடி நடகின்றன. என்னோமோ நடக்கிறது இந்த காங்கிரஸ் அரசு எதற்காக் இப்படி இலங்கை அரசுக்கு ஆயுத உதவியும் பண உதவியும் அளித்து வருகிறது என்பது கடவளுகே விளங்காத ஒன்று.

எனக்குள் எழும் எண்ணங்கள் என்னையே அருவேருப்பாக்கி பார்கின்றன ஒட்டு மொத்தத்தில் எல்லா தமிழனும் இப்படி தான் நினைகிறான். ஒவ்வொரு தமிழனும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என குமருகிறான். எம் மக்கள் மாக்களை போல அழிக்க பட்டு கொண்டு இருக்கும் வேளையில் நான் மட்டும் இங்கே சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமிபத்தில் கூட இலங்கைக்கு 36 கோடி உதவி அளித்திருக்கிறது நடுவண் அரசு. எதற்காம் போரில் இருந்து இலங்கை மீண்டு ஐ டி துறையில் செழித்து விளங்கவாம் .ஆம் எம் இன மக்களின் சடங்லங்கள் மீது இருந்து கொண்டு அதை அவர்கள் செய்ய வேண்டும் அது தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூலி கார அரசின் நோக்கம். நாமெல்லாம் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டும். ரத்தம் கொதிக்கிறது, இந்த நிமிடத்தில் சிங்கள அரகர்களின் பிரதிநிதி ராஜபக்சே இன்போசிஸ் நாராயணமூர்த்தியை சிறி லங்காவின் முதன்மை ஐ டி ஆலோசகராய் நியமித்து இருக்கிறார். எங்கே போய் என் தலையை இடித்து கொள்வது. இப்படி ஒரு பதவியை நாராயணமூர்த்தி வகிப்பதற்கு பதில் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் இரண்டரை லக்சம் தமிழ் மக்களையும் கொன்று விட்டு முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் மன உலச்சளால் தீ குளிக்க வைத்து விட்டு தான் ராஜபக்சேவும் அவர் அடி வருடும் இந்திய கனவான்களும் உறுங்கவர் என்ற உண்மை வெகு தூரத்தில் இல்லை.

எம் மக்களே ஒவ்வொரு தமிழனும் என்னை போல தன் ஒவ்வொரு நாள் விடியும் போதும் ஏங்கி கொண்டு இருக்கிறான். எம் மக்களை காப்பாற்றுவார் யாரோ.

எம் தமிழினம் வாழுமோ இல்லை இப்படி மெல்ல சாகுமோ..........

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

பால் பாயசம்


அந்த காலை நேரத்தில் பயணிகள் நிழற்குடையின் அருகில் நின்று கொண்டுஇருந்தான் இளங்கோ. மனதுக்குள் தன் காதலியை நொந்து கொண்டு இருந்தான். தினமும் இவளுக்கு இதே வேலை தான் சீக்கிரம் வாடி கொஞ்ச நேரமாவது ஒன்ன பேசிட்டு இருக்கலாம் சொன்னா எங்க கேட்கிறா. "அதோ வந்துட்டா " அவன் பார்த்த திசையில் மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு அஞ்சலி மிகவும் அழகு தான். இளங்கோ ஒரு வேலையில்லா பட்ட தாரி கட்ட பொறியியல் படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தான். என்ன செய்வது வேலை கிடைத்த பாடில்லை.

அஞ்சலி அந்த அழகு தேவதை இவன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் குடி இருக்கிறாள். இளங்கோ வேலை இல்லாதவன் என்றாலும் ஒரு சமுக ஆர்வலன். அவனின் புரட்சி கருத்துகள் அஞ்சலியை அவன் மேல் காதல் கொள்ள வைத்தன. இவர்கள் காதல் வழக்கம் போல இருவர் வீட்டுக்கும் தெரியாது. அஞ்சலி இளங்கோவை நெருங்கி விட்டாள்.

"ஏன் அஞ்சலி இவளோ நேரம். தினமும் உனக்கு இதே வேலையை போச்சு."

"கோவா படதேங்க இளங்கோ வழக்கம் போல அம்மா லேட் பண்ணிட்டாங்க".

"சரி வா ஆட்டோலயே போய்டலாம் அட்லீஸ்ட் உன் கூட கொஞ்ச நேரமாவது ஸ்பெந்ட் பண்ணலாம்."

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். "ஆட்டோ எல் ஐ சி போப்பா" இளங்கோ சொல்ல ஆட்டோ புறப்பட்டது.

"இளங்கோ எப்போ தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது" " அஞ்சலி உனக்கே தெரியும் ஒரு நல்ல வேலை இல்லாமல் நம்ம சென்னைலே வாழ முடியாது."

"இளங்கோ எங்க வீட்டிலே மாப்பிள்ளை பார்க்க தொடங்கிட்டாங்க நம்ம இப்படியே இருக்க முடியாது. சீக்கிரமா நீங்க ஒரு வேலை பாருங்க இல்லேன்னா நம்ம காதலை மருந்தட வேண்டியது தான்."

இளங்கோவுக்கு கோபம் வந்தது. "இத பார் அஞ்சலி எல்லோரை மாதிரி நீயும் இப்படி பேசுவேநு நான் எதிர் பார்க்கலே. நானும் வேலை தேடிட்டு தான் இருக்கேன் ஆனா என்ன பண்றது."

"அப்படினா பேசாம என்னை மறுந்துடுங்க. என்னால எங்க அப்பாவே மீறி ஒன்னும் செய்ய முடியாது இளங்கோ."

பின்னர் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
எல் ஐ சி வந்தவுடன் அஞ்சலி இறங்கி விட்டாள். "இளங்கோ நல்ல யோசிச்சு முடிவு எடுங்க".

இளங்கோ ஏற்கனவே மிகுந்த வேதனை பட்டு கொண்டு இருந்தான். அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அப்பா இல்லாததால் அம்மா மிகவும் சிரமப்பட்டுதான் படிக்க வைத்தாள். ஆனால் இளங்கோவுக்கு படிப்பு நன்றாக வந்துது என்பதால் எப்படியோ ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்து படித்து முடித்து விட்டான். வேலை தான் இன்னும் கிடைக்கவில்லை.

இளங்கோ வீட்டை அடைந்த போது அம்மா வீட்டில் இருந்தாள். "ஏன்மா இன்னிக்கி வேலைக்கு போலையா" " இல்லடா கண்ணு இந்த மூச்சு விட ரொம்ப சிரமமா இருக்குட அது தான் திரும்பி வந்துட்டேன். அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. இளங்கோவுக்கு அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு லச்சம் பணம் தேவை பட்டது. "இந்த பாழா போன வேலை கிடக்கஅலையே என்று தோணியது.

இளங்கோ ஒரு துணை பொறியாளர் வேலைக்கு விண்ணப்பம் போட்டு இருந்தான். அம்மா சொன்னாள் "கோவேர்மேன்ட் வேலை இது கிடைச்சா என் கவலை எல்லாம் போயிடும். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அது நிறுத்தி வைக்க பட்டு இருந்தது.

இளங்கோ வீட்டை விட்டு வெளியில் வந்த நேரம் அந்த பகுதியின் வட்ட செயலர் நின்று கொண்டு இருந்தார். "வாங்க தம்பி. எங்க கட்ச்யில் வந்து சேர சொன்னா சேர மட்ரே. இதோ பார் புரட்சி கருத்து எல்லாம் வாழ்கைக்கு ஒத்து வராது. ஒரு வேலை இருக்கு செய்றியா ரெண்டு லச்சம் தருவாங்க உன் குடும்பத்துக்கு."

இளங்கோ யோசித்தான் இப்போ அந்த பணம் கிடைத்தால் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்யலாம். சரி என்றான். "என்ன வேலை". அவர் கூறியதாய் கேட்டு அதிர்ந்தவன் அம்மாவின் ஆபரேஷன் நினைவுக்கு வர ஒத்து கொண்டான்.

அந்த கட்ச்யின் தலைவரை கைது செய்து விட்டார்கள். அதை எதிர்த்து ஆளுநர் மாளிகைக்கு உர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த கூட்டத்தில் முதல் ஆளாக இளங்கோ.

அம்மா இளங்கோவை தேடி கொண்டு இருந்தாள். பக்கத்து வீட்டு கோபாலிடம் கேட்டாள். " ஏன்பா கோபாலு என் புள்ளைய பாத்தியா. இல்லைமா." "
"எங்க போய்ட்டான். போஸ்ட் மேன் தூரத்தில் வருவது தெரிந்தது. வாப்பா என்ன அம்மா கேட்க
போஸ்ட் மேன் சொன்னான். உன் புள்ளைக்கு வேலை வந்திருக்கு. அந்த துணை பொறியாளர் வேலை வந்து இருந்தது. " அம்மா இளங்கோவுக்கு பிடித்த பால் பாயசம் வைக்க அடுப்பை பற்ற வைத்தாள்.

அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இளங்கோவை காணவில்லை. அங்கே ஆளுனர் மாளிகை முன் பெரிய கூட்டம் கூடி இருந்தது. " தலைவரை விடுதலை செய் !!!!!!!
தலைவரை விடுதலை செய் !!!!!!! தலைவரை விடுதலை செய் !!!!!!!" . திடீர் என இளங்கோ கூடத்தின் முன்னே வந்தான். கையில் ஒரு பெட்ரோல் கேனுடன். நிமிட நேரத்திற்குள் பெட்ரோல் முழுவதும் தன் மீது ஊற்றி கொண்டவன் தீபெட்டியை எடுத்து பற்றவைத்தான். பெட்ரோல் இளங்கோவின் உற்ற நண்பன் போல திபு திபு என எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. இளங்கோ கரி கட்டையாய். வீட்டில் அம்மா வைத்த பால் பாயசம் கொதித்து கொண்டு இருந்தது.




பி.கு : இந்த செய்தியை அறிந்த மாலதி குற்ற உணர்வால் பைத்தியம் ஆகி விட்டாள் .

சாரிங்க ரொம்ப சோகமான கதை தான். ஆனா ஏழைகளுக்கு எல்லாம் காதல் ஒரு சாப கேடு தான். அதனால தான் காதலர் தினத்தில இப்படி ஒரு கதை.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

தமிழ் இழம் காப்போம்


இலங்கை பற்றி எனக்கும் சில வார்த்தைகள் எழுத வேண்டிஇருக்கிறது. என் மக்கள் அங்கே படும் பாடு சொல்லி தெரிய போவதில்லை. நம் இந்திய தேசம் நினைத்து இருந்தால் இந்த இன படுகொலையை எப்பொழுதோ தடுத்து இருக்கலாம். ஆனால் இப்போது இங்கு ஆளும் காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்த்யின் படுகொலைக்காக என் மக்களை பழி வங்கி கொண்டு இருக்கிறது. ஒரு தனி மனிதரின் மரணத்துக்காக அப்பாவி மக்கள் இலங்கையில் கொல்லபடுவதும் நம் இந்திய அரசு அதை மறைமுகமாய் ஆதரிப்பதும் வேதனையான ஒன்று.

தமிழ் இன தலைவர் என மார் தட்டி கொள்ளும் திரு.கருணாநிதி தன் பதவி ஆசைக்காக காங்கிரஸ் அரசை எதுவும் கேட்பதில்லை. நம் முன் கபட நாடகம் ஆடி கொண்டு தன் இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் காங்கிரஸ் அரசை அடி பணிய வைத்து இருக்கலாம். கேவலம் தன் குடும்ப நலனுக்காக இலங்கை தமிழரின் வாழ்கையை காங்கிரஸ் அரசிடம் அடகு வைத்து விட்டார் இந்த தமிழ் இன தலைவர். இது இன்னும் சிலர் இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறரர்கள்.

ஆக மொத்தம் தமிழ் இனம் அழிந்து கொண்டு இருக்க இந்த தன்னிகர் இல்லா தலைவர்கள் இதை அவரவர் சூழ்நிலைகேற்ப உபயோக படுத்தி கொள்கின்றனர். இது போன்ற தலைவர்களை வைத்து கொண்டு நாமும் தமிழ் இனம் அழிவதை பார்த்து கொண்டு கை பிசைந்து கொண்டு தான் இருக்க போகிறோம்.

சில புத்திசாலிகள் இதை கஷ்மீர் பிரச்சினையோடு ஒப்பிடுகின்றனர். கஷ்மீர் பிரச்சின்னையின் அடிபடையே வேறு. இது அவர்களக்கு எப்படி சொன்னாலும் புரிய போவதில்லை. உண்மையை சொன்னால் காஷ்மீரில் அதன் குடி மக்கள் யாரும் வசிக்கவில்லை. அவர் அனைவரும் புலம் பெயாந்து வேறு மாநிலம் சென்று விட்டனர். மிச்சமுள்ள முஸ்லீம் மக்கள் திவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை எதிர்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு ராஜீவ் கொலைக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அழிப்பது எப்படி சரியாகும். தவிர விடுதலை புலிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது. அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு பிரபாகரனை ஒரு ராணுவ தளபதியை விட்டு பிரபாகரனின் முதுகுபுறம் சுட சொன்ன ராஜிவை அவர்கள் கொன்றது தவறில்லை தான் அவர்களை பொறுத்த வரை. ஆனால் நமக்கு அது நியாயம் இல்லை தான். அதற்காக இலங்கை தமிழ் மீது முழுவதும் தாக்குதல் நடப்பதை நம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் ஒன்று திரண்டு இதை எதிர்க்கத்தான் வேண்டும்.

தமிழ் மக்களே குரல் கொடுங்கள். நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிதந்தை செய்வோம். தயைவு செய்து தீகுளிபதும் உயிர் நீப்பதும் இதற்க்கு முடிவல்ல. நம் கோரிகையை எல்லா இடங்களுக்கும் பரப்புவோம். இலங்கையில் போர் நிறுத்தம் வர பாடுபடுவோம் நம் மூச்சுள்ளவரை.

வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.