வியாழன், 25 ஜூன், 2009

check


check

ஞாயிறு, 31 மே, 2009

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம்


அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2009, 07:59 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.
கொழும்பு அரசாங்கத்தின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் பேசமுடியாத விடயங்களாக உள்ளன. அது தொடர்பான தவறுகளை தவிர்ப்பதற்கு வன்னியில் நடைபெற்ற போரில் இறுதி வாரங்களில் என்ன நடைபெற்றது என்பதை சிறிலங்கா மக்கள் எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும்.
அதாவது, இந்த போரானது அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொடுமையான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்துலகம் கண்மூடிக்கொண்டு இருந்துள்ளது அல்லது இந்த போரில் ஒரு பக்கத்தில் மரணிப்பவர்கள் கருமையான தோலைக்கொண்ட ஏழை மக்கள் எனவும் அவர்கள் எண்ணி மௌனமாக இருந்திருக்கலாம்.
எவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு அப்பால் அவர்கள் மீது இனச்சுத்திகரிப்பு என்ற பதமும் பிரயோகிக்கப்படவில்லை.
உலகின் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ச்சியாகவும், வரலாற்று ரீதியாகவும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர்.
எனவே தமது உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை.
இதன் தொடக்கமாக உடனடியாக விடை காணப்படவேண்டிய பத்து கேள்விகள் உள்ளன.
1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?
2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?
3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?
4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?
5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?
6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?
7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?
8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?
9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?
இவ்வாறு 'கௌண்டர் கரண்ட்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

நன்றி புதினம்.காம்.


ராஜபக்சேவை சர்வ தேச நீதி மன்றத்தில் நிறுத்துங்கள் - இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்.

வியாழன், 28 மே, 2009

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு


ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு முடிவு [வெள்ளிக்கிழமை, 29 மே 2009, 07:12 மு.ப ஈழம்] [பி.கெளரி] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் முடிவு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது என்று 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததை தொடர்ந்து மேற்குலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்யமுடியாத நிலையை அடைந்துள்ளது. சிறிலங்காவில் முற்றுப்பெற்ற போர் பாரிய மனித உரிமை மீறல்களுடன் நிறைவுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா, ரஸ்யா, இந்தியா உட்பட 26 நாடுகள் சிறிலங்கா அரசின் பிரேரணையை ஆதரித்திருந்தன.
சிறிலங்கா அரசு தனது பிரேரணையில் உள்நாட்டு விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதை எதிர்த்ததுடன், விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.
ஆனால், அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படாதது, மனித உரிமை சபைக்கு ஒரு பின்னடைவாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டவியல் பணிப்பாளர் ஜூலீற்றா டி றைவிரோ தெரிவித்துள்ளார்.
கனடா, மெக்சிக்கோ, சிலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலேயே சபையின் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள உள்ளனர்.
உதவி நிறுவனங்களின் பணிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கப்படுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சிறிலங்காவில் நடைபெற்ற மோதல்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
இறுதி வாரம் நடைபெற்ற சமரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். மக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுத்ததுடன், எறிகணைத் தாக்குதல்களை மக்களின் மீது சிறிலங்கா அரசு நடத்தியிருந்தது.
மக்கள் காணமால் போவது, துன்புறுத்தப்படுவது, நிதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்படுவது போன்ற தகவல்கள் தற்போதும் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வருடகால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளது. இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி புதினம்.காம்

திங்கள், 25 மே, 2009

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது


ஊடகங்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநல கிருமிகள் ஆனால் நாம் முதலில் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கிற எம் மக்களை காப்பாற்றுவோம் பின்னர் இந்த நச்சு கிருமிகளை அழிக்கலாம். உங்களுக்கு இன்னும் இந்த கிருமிகள் மேல் நம்பிக்கை உள்ளதா மக்களே. இந்திய திருநாட்டில் நெடுங்கலமாய் தமிழனம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது வெகு சிலரால் தான் உணர முடிகிறது. தந்தை பெரியார் சொன்னது போல நாம் எல்லாம் அடிமைகள் தான் ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்ற போர்வையில். வேற எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தாரை தவிர எவரும் இந்த அளவு நிம்மதியாக இருக்க இயலாது. "வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்.

எல்லா இந்திய ஊடகங்களும் தமிழனை ஏமாற்றும் முயற்சியில் முழு வெற்றி அடைந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆனால் நாம் நம் முதல்வரை குறை கூறுவுது ஏன் தெரியுமா. தமிழ் இன பிரதிநிதியாய் அவரை போற்றும் நம் மக்களக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் என்னும் நச்சு பாம்பு தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என தெரிந்தும் அவருடன் உறவாடுவதை எந்த தமிழனாலும் ஏற்று கொள்ள இயலாது . எந்த ஒரு போராட்டமும் முன்னே செல்ல ஒரு தலைவர் அவசியம் என்ன தான் சிலர் முதல்வரை ஏற்று கொள்ளா விட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு தலைவர் இப்படி செய்வது நமக்கு எப்படி மன அமைதியை தரும். நீங்களோ நானோ சென்று நடுவண் அரசிடம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதீர் எங்கள் ஈழ ரத்த உறவுகளை காப்பாற்றுங்கள் என சொல்ல முடியுமா. நம் ஒவ்வொரு தமிழனாலும் போராட இயலாது என்று தானே நம் முதல்வரை அனுப்பினோம் ஆனால தன் குடும்பத்தின் அரசியல் எதிர் காலத்திர்க்காகவும் சுயநலம் பேணவும் நம் முதல்வர் இப்படி செய்யலாமா.

ஒரு கோணத்தில் எப்படி இருந்தாலும் மக்கள் சபையில் முதல்வர் செய்த நம்பிக்கை துரோகம் தான் முன்னில் நிற்கும். தமிழரின் பால் ஒற்றுமை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உளமாற்று வித்தைகள் என சிலர் இவற்றை கூறினாலும் உண்மை கசக்க தானே செய்யும். எம் ரத்த உறவுகள் எம்மை காப்பற்றும் என எண்ணி இருந்த ஒவ்வொரு ஈழ மனமும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கும். தன்னிகரில்லா ஒரு தூய தலைவன் இந்த நெடிய சுதந்திர போராட்டத்தில் அவர் தம் வாழ்வு ஆதாரமாய் விளங்கிய ஒருவனும் உயிருடன் உள்ளனா இல்லையா என பதறும் அந்த உயிர்களுக்கு விடை சொல்ல போவது யார். நாளை நமக்கும் இந்த நிலை ஏற்படாதென என்ன நிச்சியம். இத்துணை விடயங்கள் நடந்து இருந்தும் இன்னும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் நாம் என்ன உணர்த்த போகிறோம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய, சீன அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி யார் குரல் கொடுக்க போகிறோம். நாமும் இந்திய பிரஜைகள் தானே பின்னர் ஏன் இந்த இந்திய அரசுக்கு நம் மேல கோபம். புரியவில்லை ராஜீவை கொன்றதாலா, ஒரு உயிருக்காக இத்துணை உயிர்கள் வேண்டுமா . ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்க அமைக்க பட்ட ஜெயின் கமிசன் கேட்ட பல கேள்விகள் இன்னும் புதிராகவே உள்ளன. அந்த விசயத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டு இருக்கிறது. கேள்விகள் பல. நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

வியாழன், 21 மே, 2009

தமிழரின் தாகம் தமிழ் ஈழமும் புலிகளும்


தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.

புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.

இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்.

புதன், 20 மே, 2009

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.


உண்மையில் இந்திய அரசு நினைத்து இருந்தால் இந்த இனதொழிப்பு போரை தடுத்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு தனது வெளிஉறவு கொள்கைக்காகவும் பிரந்திய பாதுகாப்புக்காகவும் ஈழ மக்களின் உயிரை பணயமாக வைத்து விட்டது. குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம் அப்படி செய்து இருந்தால் பல மடங்கு அழிவு தடுக்க பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் உள்ள பல பேருக்கு ஈழத்தின் அடிப்படை உண்மைகள் தெரியாது போய் விட்டன. தமிழர் ஆகிய நாம் நம் எதிர்ப்பையும் வேண்டுகோளையும் சற்றே வலுவான முறையில் ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் உணர்த்தி இருக்கலாம். ஈழம் பற்றிய செய்திகளும் அங்கு செய்ய படும் இன கொலைகளின் நிழற்படங்களும் நமக்கே கிடைக்கும் போது எந்த ஒரு மக்கள் அவை உறுப்பினரும் அல்லது சட்டசபை உறுப்பினரும் இந்த ஆதாரங்களோடு விவாத நேரத்தின் போது பேசி இருக்கலாம்.
ராஜீவ் கொலைக்கு பின் தமிழ் ஈழம் என்ற தேசிய உணர்வு கொண்டவர் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலைக்கு தள்ள பட்டு விட்டனர். எந்த இந்தியனும் கொலை நிகழ்ந்த களம் அதன் காரணங்கள பற்றி ஆராயவில்லை.
ஒரு அரசு தனது ஆயுத பலத்தை முன்னெடுக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை எத்துனை காலம் அஹிம்சா முறையில் எதிர்ப்பர் என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. எப்படி மாற்றி சொன்னாலும் புலிகள் முன்னெடுத்த ஆயுத போரட்டமே இலங்கை அரசு மட்டுமின்றி நிகழ்கால உலகும் ஒரு முக்கிய பிரச்சினையாக ஈழ பிரச்சனயை எடுத்து கொள்ள காரணமானது. இதை இல்லை என்று மறுப்பவர் வரலாறு அறியாதவர் என்றே சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா அவர்களின் சொற்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கும் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது உலக நியதி அது தான் ஈழ போராட்ட களத்திற்கும் பொருத்தமானது. எனவே புலிகளை விடுத்து ஈழ பிரச்சினையினை நாம் பார்க்க இயலாது. மிக சிலரை விடுத்து பெருபான்மை தமிழ் மக்கள் புலிகளை தங்கள் ஏகபோக பிரதிநிதிகளாய் பார்த்தார்கள் என்பதே உண்மை. இந்திய, சீன அரசுகளின் ஆயுத உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் இலங்கை அரசு இந்த போரில் வென்று இருக்காது .
ஒரு பழமையான இனத்தின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அடையாளமிட்ட பெருமை இந்திய மக்களாகிய நம்மையே சேரும். ராஜீவ் என்ற ஒரு மாசுபட்ட மனிதனின் படுகொலைக்காக அந்த குற்றம் முழுமையாய் நிரூபிக்கப்படாமல் இருந்தும் நம் உறவுகளின் தமிழ் ஈழ கனவையும் அவரது அடிப்படை உரிமைகளையும் படுகுழியில் இட்டு புதைத்து கொன்ற பெருமையும் நம்மையே சாரும். ஈழ வரலாற்றின் ரத்த பக்கங்களின் பெரும் பகுதி இந்த இந்திய திருமக்களுக்காகவும் தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் மக்களுக்காகவும் கண்டிப்பாய் ஒதுக்கபட்டு இருக்கும். தமிழ் ஈழ எதிர்பாளர்களும் தமிழ் இன தலைவர் என மார் தட்டி நடக்கும் கயவரும் அந்த வரலாறு தெரிந்தும் இழைத்த தோரகங்கள் இந்த உலகுக்கும், தமிழ் ஈழம் தவறு என பேசி திரியும் நம் தற்போதைய தலைமுறை தமிழருக்கும் ஒரு தினம் கண்டிப்பாய் தெரிய வரும்.
எவ்வாறேனும் தமிழ் ஈழம் என்பது கண்டிப்பாய் உதித்தே தீரும். எம் மக்கள் எப்படி ஒடுக்க பட்டாலும் அது அமைந்தே தீரும் ஒரு வரலாற்று போராட்டத்தின் மூலமாய் எம் தலைவனின் உதவியோடு.

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.

சனி, 16 மே, 2009

நெஞ்சு பொறுக்குதிலையே


"நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்து விட்டால்" தமிழ் கவினர் பாரதி இப்படி பாடி இருக்கலாம். என் நெஞ்சு கொதித்து போய்விட்டது. நம் தமிழ் மக்களை என்னவன்று சொல்வது என்ன தான் நினைத்து இந்த தேர்தலில் இவர் ஓட்டு போட்டனர் என்று தெரிய வில்லை. இன உணர்வு என்பது தவறாசரியா என்பது அல்ல வாதம். எம் இன மக்கள் மாக்களை போல அழிக்க படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த திரு.காரணநிதி அவர்கள் மறுபடியும் வெற்றி. சீமான் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்இல்லை என்று தோன்றுகிறது. தமிழனின் இன உணர்வு சில சுயநல கொள்கைகள், பல ரூபாய் நோட்டுகள் போன்றவற்றிக்கு விற்கப்பட்டு விட்டது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 6000 தமிழர்கள் கொல்ல பட்டு உள்ளனர். அரக்கன் ராஜபக்சே இன்னும் இரண்டு நாட்களில் புலிகளை (தமிழர்களை) முடித்து விடுவோம் என சொல்லி இருக்கிறார். அதற்கு அனுமதி கொடுத்தார் போலே இங்கு முடிவுகள் வந்து விட்டது. அன்னை சோனியா காந்தியின் எண்ணப்படி இனி கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் மக்களும் கொல்ல பட்டுவிடுவர் வரும் மே 21 முன் எல்லாம் நடந்து விடும்.
தமிழ்நாட்டில் இனி என்ன நடக்கும் வழக்கம் போலே கருணாநிதி இந்த முறை பத்து மந்திரி பதவி கேட்பார். இன்னும் ஒரு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டு போய் சேர்வர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அனுதாப அலை மூலம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்.
இலங்கையில் ராஜபக்சே கடைசி தமிழரின் ரத்தத்தை உறிஞ்சு முடித்த பின் ஐ.நா சபையும் அமெரிக்காவும் தலை இட்டு போர் நிறுத்தம் கொண்டு வரும். ஐ.நா சபை நிலைமையை ஆராய ஒரு குழுவை அனுப்பும். குழுவினர் அங்கு சென்று ஆராய்ந்த பின் தமிழர் என்று ஒரு இனமே அங்கு இல்லை என அறிக்கை விடுவர். இலங்கை முழு சிங்கள நாடாய் ஜொலிக்கும்.
சீனா இலங்கையின் கையை பிடித்து இந்தியாவின் முக்கிய பகுதிகளை வேவு பார்க்கும். இன்னும் இருபத்துஆண்டுகளில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும். இலங்கையின் உதவியோடு இந்தியாவை சீனா போரில் வெல்லும். தமிழ்நாடு இலங்கையின் ஒரு பகுதி என இலங்கை உரிமை கோரும் கருணாநிதியின் கேடு கெட்ட வாரிசுகளும் சில பல நோட்டுகளுக்காக ஆமாமா போடுவார்.
இதெல்லாமும் நடக்கும். தமிழன் அப்புவும் அவன் வயரு நிறைஞ்சபோதும் நு சொல்லுவான்.இந்த நாட்டில பிறந்த ஒரே பாவத்துக்காக என்னை போன்ற தமிழர் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்வர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு


மறுபடியும் திரு.வைகோ அவர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளது. ஒரு பொது கூட்டத்தில் அவர் சொன்ன கருத்துக்காக இந்த நடவடிக்கை. அவர் சொன்னது "இலங்கையில் பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும் ". இதற்காக தான் அந்த வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளது. எனக்கு ஒரு விடயம் புரிய வில்லை. தமிழ் நாட்டில் எல்லா மக்களுக்கும் இன உணர்வு சுத்தமா பொய்த்து விட்டதா இல்லை ஏன் நம் மக்கள் எல்லோரும் இப்படி சிறிது கூட சொரணை இல்லாமல் இருக்கிறார்கள். வைகோ சொன்னதில் தவறு இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடந்த 50 ஆண்டுகளாய் தமிழனுக்கு இருந்த உணர்வு அடகு வைக்க பட்டு விட்டது. சரி இன்று தமிழின தலைவர் என தன்னை இனம் காட்டி கொள்ளும் நம் மாண்புமிகு முதல் அமைச்சர் சொன்னது "விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறை பிடிக்க பட்டால் அவரை ராஜபக்சே அலெக்ஸ்சண்டேர் போரஸ் மன்னரை நடத்தியது போல் நடத்த வேண்டும்" . வைகோ சொன்னது தவறு என்றால் இவர் சொன்னதும் தவறு தானே . இவரை எந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது. ஆக மொத்தத்தில் ஆட்சியில் இருப்பவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மற்றவர் எல்லாம் வாயை பொதி கொண்டு சும்மா இருக்க வேண்டும். ஈழ தமிழனுக்கு முதல் அமைச்சர் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும். என்னப இதை தான் ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று சொன்னாங்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புதன், 1 ஏப்ரல், 2009

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்



இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய் [புதன்கிழமை, 01 ஏப்ரல் 2009, 04:18 பி.ப ஈழம்] [க.நித்தியா]

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.

இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:

இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.

இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.

தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.

சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.

ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்
ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.

வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.

ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.

முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.

படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி புதினம். காம்



வியாழன், 26 மார்ச், 2009

எங்கே செல்லும் இந்த பாதை,அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும்குரல்


எங்கே செல்லும் இந்த பாதை - இந்த பதிப்பு புதினம்.காமில் இருந்து வெளி இடபட்டது. எம் மக்களுக்காக இந்த கடிதம் என்னால் முடிந்த வரை எல்லாதமிழர்களையும் சென்றடைய வேண்டும் என விரும்பி இந்த முயற்சி. இந்தகடிதம் உண்மையான ஒரு ஈழ தமிழரின் மன குமறல்.

அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும்குரல்

[வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2009, 06:35 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும்என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும்அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும்கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும்செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரியநாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்டஒரு கடிதம்.


எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில்துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயேஇவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு:

நா.தயாபரன்.
இரட்டைவாய்க்கால்,
முல்லைத்தீவு.
26.03.2009

எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுங்கள்

அன்புடையீர்!

சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் ஏனைய செய்தி ஊடகங்களும் எம்தொடர்பாக வெளியிடும் செய்திகளையும் கருத்துக்களையும்செயற்பாடுகளையும் கேட்கும்போது ஆடு வெட்டுபவனின் முன்னால் நிற்கும்ஆட்டின் மனநிலையில் துடிக்கின்றோம். எமது உணர்வுகளை புரிந்துகொள்ளயாரும் இல்லையா?

எனது மனது எமது உண்மை நிலையை அவர்களுக்கு தெரியப்படுத்த வேணும்எனத் துடிக்கும். ஆனால் எந்த வழியும் இல்லை. அதனால் மன ஆறுதலுக்காகஎழுதிவிட்டு கிழித்தெறிவேன். இதையும் கடும் மனப்பாரத்துடன் எழுதஆரம்பிக்கின்றேன். யாருடைய காலைப்பிடித்தென்றாலும் இதை எந்தவழியிலாவது அனுப்ப வேணும் என்ற உறுதியுடன் எல்லாம் வல்லஆண்டவரை மனதில் இருத்தி தொடர்கிறேன்.

கிளிநொச்சியில் அச்சகம் வைத்திருந்து படு பிசியாக இருந்த நான் குறைந்ததுநாற்பது லட்சம் பெறுமதியான அச்சகத்தை உடையார்கட்டுடன் விட்டுவிட்டுஇன்று எட்டாவது இடம்பெயர்வாக இரட்டைவாய்க்கால் எனும் ஊரின்வெளியில் தரப்பால் கொட்டகையில் வெயிலிலும் மழையிலும் வர்ணிக்கமுடியாத துன்பத்தை அனுபவிக்கிறோம். இந்த துன்ப இருளிலிருந்துநிரந்தரமான விடியலை எதிர்பார்க்கின்றோம். இதனைக்கூட எழுதும் போதுமேலே கிபிர் அருகிலெங்கேயோ தாக்குதல் நடத்துகின்றது. பங்கருக்குள்ளேயே வாழ்க்கை.

எல்லா ஊடகங்களின் செய்திகளையும் உள்வாங்கக்கூடியதாக இருந்தும் எமதுமன உணர்வுகளை, பிரச்சினைகளை சர்வதேசம் புரிந்துகொள்ளக்கூடியவகையில் எந்த ஊடகங்களும் எம்மிடையே இல்லை. இங்குள்ள ஊடகங்களைசர்வதேசம் நம்புவதாகவும் இல்லை. சர்வதேசமும் தாம் நம்பக்கூடியஊடகங்களையோ அமைப்புக்களையோ இங்கு அனுப்புவதற்கு போதியமுயற்சி எடுக்கவில்லை.

மாறாக சிங்களம் சொல்பவற்றையும் காட்டுபவற்றையும் மட்டும் கருத்தில்கொண்டு பக்கச்சார்பாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செய்திகளையும்அறிக்கைகளையும் விடுகின்றது. களத்தில் அடிபடும் மக்களாகிய நாம் இந்தஅறிக்கைகளையும் செய்திகளையும் கேட்டு வெந்த புண்ணில் வேல் பாய்வதாகதுடிக்கின்றோம்.

எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்குசெயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம்வெளியேற்றும் போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்றுஇங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிறார்கள். இது எந்தளவு பெரிய நாடகம்.

பரந்து விரிந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் வாழ்ந்தோம். இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இராணுவநடவடிக்கை காரணமாக வாழ்விடங்கள், சொத்துக்கள், சொந்தங்களையெல்லாம் சிதறவிட்டு, திடீரென இராணுவம் ஏவும்எறிகணைக்கும் கிபிர் தாக்குதலுக்கும் சிக்குப்பட்டு உயிருக்கு உத்தரவாதமற்றவாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.

ஏற்படுத்தப்பட்டுள்ள உணவுத் தட்டுபாடும் மருந்துத் தட்டுப்பாடும்அடுத்துவரும் நாட்களில் எப்படியிருக்கப் போகின்றது என்பதை நினைக்கும்போது பயங்கரமாக உள்ளது. எமது இக்கட்டான அவலநிலை தெரிந்திருந்தும்சிங்களத்தின் கபட அரசியலில் சர்வதேசம் அடிபட்டுவிட்டதா? அல்லது ஏதோஒரு காரணத்திற்காக சர்வதேசமும் எமது அழிவை விரும்புகின்றதா? என்றுபுரியவில்லை.

எம்மை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து எடுப்பதாக அரசும்சர்வதேசத்தின் சில நாடுகளும் பல தந்திரோபாயங்களைக் கையாள்கின்றது. அரசின் கட்டுப்பாட்டில் வாழ விரும்பியிருந்தால் சமாதான காலத்திலேயே நாம்வெளியேறியிருக்க முடியும். போரின் மூலம் எமது தொண்டைக்குழியைநெரித்தவாறு நீ இராணுவத்திடம் போ அல்லது சாகடிக்கப்படுவாய் என்று எமதுஉணர்வுகளுக்கு சிறையிட சிங்களமும் சர்வதேசமும் கங்கணம் கட்டிநிற்கின்றன.

சிங்களம் காலம் காலமாக தமிழினத்தை எவ்வாறெல்லாம் ஏமாற்றி அடக்கிவருகின்றது என்பதை நடுநிலையாக இருந்து மனச்சுத்தியுடன் பகுத்தாய்வுசெய்தால் தெரியும். அதன் மூலம் தமிழினம் சிங்களத்துடன் இணைந்து வாழமுடியாது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். இன்றும் எமது உரிமையைமறுத்து அனைத்து சிங்களவர்களும் ஆதரவாக உள்ளார்கள்.

அடிப்படையிலேயே சுயநலமும் பச்சோந்தி மனநிலையும் பதவி வெறியும்உள்ள எமது இனத்திற்காகப் போராட பலர் புறப்பட்டனர். பலநெருக்கடிக்கடிகளையும் துரோகங்களையும் எதிர்கொண்டு இன்றுவரைகொள்கை மாறாது இருப்பவர் வே.பிரபாகரன் மட்டுமே.

ஏனையோர் தமது சுயநலன்களுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை விற்கவும்துணிந்து விட்டனர். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று உள்ளது என்பதைஉலகு திரும்பிப்பார்ப்பதற்கு வே.பிரபாகரனே காரணம். எமது இனத்தின்பச்சோந்தி தலைவர்களைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதற்கு பலதந்திரோபாயங்களை சிங்களம் கையாள்கின்றது. இப்பச்சோந்தித்தலைவர்களின் இருப்பு பிரபாகரனின் இருப்பிலேயே தங்கியுள்ளது என்பதைபிற்போக்கானவர்கள் இன்னும் உணரவில்லை.

1958-1983 வரை பல இனக்கலவரங்களை தூண்டி எமது இனத்தை சிங்களம்அழித்து வந்தது. 1983 இல் பிரபாகரன் வலுப்பெற்ற பின்னர் வெளிப்படையாகதொடர முடியாமல் இருக்கிறது.

1958-1983 வரை இடம்பெற்ற கலவரத்தை எந்த நாடுகளும் கண்டித்து இங்குள்ளபிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை. இன்றும் அதே நிலைக்கு எம்மைகொண்டுவர சர்வதேசம் முயற்சிக்கிறது. எந்தவித உரிமைகளையும் தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்தின் தந்திரோபாயத்தில் சர்வதேசமும் எடுபட்டுஎல்ரீரீஈ ஆயுதங்களை கையளிக்கச் சொல்வதும் நாங்கள் வாழ விரும்பும்இடத்தை விட்டு சிங்களத்தின் சிறைக்கு எங்களை எடுக்க முயற்சிப்பதும் எமதுஇனத்தை 1983 இற்கு முற்பட்ட காலப் பகுதிக்கு கொண்டு சென்று எம்மைஅழிக்க சர்வதேசம் முன்வந்துள்ளது.

நான் எல்ரீரீஈ செய்வதெல்லாம் சரி என அவர்களுக்காக வாதாட வரவில்லை. அவர்களுடைய இலட்சியம் சரியானது. அதனை நோக்கிச் செல்லும்போது சிலபிழைகளை விட்டிருக்கிறார்கள்தான். பிழைகளை நியாயப்படுத்த மாட்டேன். எமக்கான ஒரு ஜனநாயக ஆட்சி வரும்போது ஒரு சிறந்த நீதியான ஆட்சியைஅவர்கள் அமைப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இந்தத் தலைமுறையுடன் எமக்கு உரிமைகள் தரப்படாமல் ஒருவேளைபோராட்டம் பின்னடைவைச் சந்தித்தாலும் அடுத்த அடுத்த தலைமுறையினர்உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடர்வார்கள்.

நியாயமான ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிக்க சர்வதேசத்தின் பல பக்கஉதவிகளுடன் சிங்கள அரசு மும்முரமாக செயற்படுகின்றது. இதில் பலஉண்மைகள், உயிர்கள் புதைக்கப்படுகின்றன. சிங்களம் எமது நிலைதொடர்பாக படுபாதகமாக பொய்சொல்லி சர்வதேசத்தையும் செய்திநிறுவனங்களையும் முட்டாளாக்குகின்றது. தளத்தில் உள்ள நாங்கள்சிங்களத்தின் உண்மைத் தன்மையை ஆராயாது சர்வதேசமும் செய்திநிறுவனங்களும் எடுபடுவதை அவதானிக்கும் போது அவற்றின்நேர்மைத்தன்மையிலும் ஆற்றலிலும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் எமது பாதுகாப்புக்கு என்னஉத்தரவாதம்? அங்கு நடைபெறும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், அடிமைத்தனங்கள் எத்தனையோ வெளிவராமல் உள்ளது என்பதை உலகுஅறியுமா? பாலியல் சித்திரவதைக்கு உள்ளான எல்லோரும் அதனைவெளியிட்டு தனது எதிர்கால அவமானத்தை தாங்கிக்கொள்ளவிரும்பமாட்டார்கள். அதேபோலதான் பல செய்திகள் அமுக்கப்படுகின்றன.

பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கூட எமது பிரச்சினை தொடர்பாக ஆய்வாளராகபேட்டிக்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொள்கைப்பற்றற்ற பச்சோந்தி தமிழர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின்பின்னணியும் பல கதைகளைச் சொல்லும்.

தயவுசெய்து எமது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். எமது பிரச்சினையைஆராய்ந்து பாருங்கள். ஒருபக்க செய்திகளை மட்டும் கொண்டு பக்கசார்பாகமுடிவெடுக்காதீர்கள். எங்களிடமும் நேரில் வாருங்கள். எங்களிடம்கருத்துக்கள் கேளுங்கள்.

நன்றி.
நா.தயாபரன்.


நன்றி புதினம்.காம்

ஞாயிறு, 1 மார்ச், 2009

கண்ணீர் தேசம்


உண்மை என்னவென்றால் இப்போது இருக்கும் தமிழர் பல பேருக்கு இலங்கையின் வரலாறு சரியாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஊடக செய்திகளின் தவறான சுட்டி காட்டுதல் பெரும்பாலான மக்களை இலங்கையின் வரலாறு பற்றி தவறாகவே எண்ண வைத்து விட்டது. இவர்களை பொறுத்த மட்டில் இலங்கை தமிழர் அனைவரும் புலிகள் தாம். இலங்கை என்ற கண்ணீர் தேசத்தின் வரலாறு அதில் தமிழர் எப்படி படிப்படியாய் இரண்டாம் தர மக்களாய் தள்ள பட்டார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியாது. இன்று இந்த நிலைக்கு ஈழ தமிழர் தள்ளப்பட முதல் காரணமாய் இருந்தவர்கள் மதிப்பிற்குரிய ஆங்கில ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சிங்கள பெரும்பான்மை மக்களின் அடி வருடி தங்கள் ஆட்சியை பாதுகாத்து கொண்டனர். அன்று ஈழ தமிழரின் அடிப்படை வேண்டுகோள்களை செவி மடுத்து அவர்கள் கேட்டு இருந்தால் இன்று எம் மக்கள் இப்படி ரத்தம் சிந்தி இருந்து இருக்க வேண்டி இருக்காது.

இலங்கை என்னும் கண்ணீர் தேசத்தின் வரலாறு ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய ஒன்று. இது என்னால் ஆன சிறிய முயற்சி ஏன் எனில் பெரும்பான்மையான பதிவர்களும் அதை படிப்பவர்களும் இலங்கை பற்றி சரியான வரலாறு தெரியாதவரை அதனை பற்றி எழுதுவதும் அவருக்குள்ளே சண்டை இட்டு கொள்வதும் வருத்ததிற்குரிய ஒன்று. உண்மையில் நம் அனைவரும் இந்தியர் என்பதும் தமிழர் என்பதும் உணர வேண்டிய ஒன்று. இதில் இன வெறி என்பதும் பாசிசம் என்பதும் தவறான கருத்துக்கள்.

இலங்கை - இந்த கண்ணீர் தேசத்தின் உண்மைகளை அறிய வேண்டுமானால் பல நூறு ஆண்டுகளின் முற்பால் நம்ம செல்ல வேண்டியது அவசியமாகிறது. இலங்கை இந்திய நாட்டின் ஒரு பகுதியாய் இருந்ததும் சிங்களர், தமிழர் இருவுரும் நம் மாற்றுருக்கள் என்பதும் உண்மையின் உண்மை. இந்துமா கடலின் நீர் அளவு அதிகமாக இலங்கை என்னும் இந்த தீவு இந்தியாவை விட்டு பிரிந்து சென்றதும் பூலோக படம் படி சரியான கூற்றைத்தான் இருக்க இயலும். நான் சொல்ல போவது என்க்கு தெரிந்த மட்டில் இந்த இலங்கை நம்மிடம் இருந்து பிரித்த பிறகு நடந்தவை.

ராமாயண காலம் தொட்டு இலங்கைக்கும் நமக்கும் தொடர்பு இருந்து வந்ததே உண்மை. பின்பு தமிழ் மன்னர்கள் வரலாறுகளும் இதேயே உரைகின்றன. இலங்கையின் பெருபான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றி வந்தனர் என்பது வரலாறு அவர்களை தன் நாம் சிங்களர் என கூறி வருகிறோம். இருந்தும் தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பரவி இருந்தனர் என்பதே வரலாறு. வடக்கு மற்றும் கிழ்க்கு பகுதிகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமா இருந்தது.

தொடரும்

புதன், 25 பிப்ரவரி, 2009

மெல்ல தமிழினி சாகுமோ


மெல்ல தமிழினி சாகுமோ

தமிழனே இன்னும் என்ன செய்ய போகிறாய். இறுதி மூச்சு வரை போராடி ஆயிற்று, மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுமே நடகாதது போல சிங்கள அரக்கன் ராஜபாக்சேவின் அடி வருடி நடகின்றன. என்னோமோ நடக்கிறது இந்த காங்கிரஸ் அரசு எதற்காக் இப்படி இலங்கை அரசுக்கு ஆயுத உதவியும் பண உதவியும் அளித்து வருகிறது என்பது கடவளுகே விளங்காத ஒன்று.

எனக்குள் எழும் எண்ணங்கள் என்னையே அருவேருப்பாக்கி பார்கின்றன ஒட்டு மொத்தத்தில் எல்லா தமிழனும் இப்படி தான் நினைகிறான். ஒவ்வொரு தமிழனும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என குமருகிறான். எம் மக்கள் மாக்களை போல அழிக்க பட்டு கொண்டு இருக்கும் வேளையில் நான் மட்டும் இங்கே சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமிபத்தில் கூட இலங்கைக்கு 36 கோடி உதவி அளித்திருக்கிறது நடுவண் அரசு. எதற்காம் போரில் இருந்து இலங்கை மீண்டு ஐ டி துறையில் செழித்து விளங்கவாம் .ஆம் எம் இன மக்களின் சடங்லங்கள் மீது இருந்து கொண்டு அதை அவர்கள் செய்ய வேண்டும் அது தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூலி கார அரசின் நோக்கம். நாமெல்லாம் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டும். ரத்தம் கொதிக்கிறது, இந்த நிமிடத்தில் சிங்கள அரகர்களின் பிரதிநிதி ராஜபக்சே இன்போசிஸ் நாராயணமூர்த்தியை சிறி லங்காவின் முதன்மை ஐ டி ஆலோசகராய் நியமித்து இருக்கிறார். எங்கே போய் என் தலையை இடித்து கொள்வது. இப்படி ஒரு பதவியை நாராயணமூர்த்தி வகிப்பதற்கு பதில் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் இரண்டரை லக்சம் தமிழ் மக்களையும் கொன்று விட்டு முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் மன உலச்சளால் தீ குளிக்க வைத்து விட்டு தான் ராஜபக்சேவும் அவர் அடி வருடும் இந்திய கனவான்களும் உறுங்கவர் என்ற உண்மை வெகு தூரத்தில் இல்லை.

எம் மக்களே ஒவ்வொரு தமிழனும் என்னை போல தன் ஒவ்வொரு நாள் விடியும் போதும் ஏங்கி கொண்டு இருக்கிறான். எம் மக்களை காப்பாற்றுவார் யாரோ.

எம் தமிழினம் வாழுமோ இல்லை இப்படி மெல்ல சாகுமோ..........

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

பால் பாயசம்


அந்த காலை நேரத்தில் பயணிகள் நிழற்குடையின் அருகில் நின்று கொண்டுஇருந்தான் இளங்கோ. மனதுக்குள் தன் காதலியை நொந்து கொண்டு இருந்தான். தினமும் இவளுக்கு இதே வேலை தான் சீக்கிரம் வாடி கொஞ்ச நேரமாவது ஒன்ன பேசிட்டு இருக்கலாம் சொன்னா எங்க கேட்கிறா. "அதோ வந்துட்டா " அவன் பார்த்த திசையில் மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு அஞ்சலி மிகவும் அழகு தான். இளங்கோ ஒரு வேலையில்லா பட்ட தாரி கட்ட பொறியியல் படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தான். என்ன செய்வது வேலை கிடைத்த பாடில்லை.

அஞ்சலி அந்த அழகு தேவதை இவன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் குடி இருக்கிறாள். இளங்கோ வேலை இல்லாதவன் என்றாலும் ஒரு சமுக ஆர்வலன். அவனின் புரட்சி கருத்துகள் அஞ்சலியை அவன் மேல் காதல் கொள்ள வைத்தன. இவர்கள் காதல் வழக்கம் போல இருவர் வீட்டுக்கும் தெரியாது. அஞ்சலி இளங்கோவை நெருங்கி விட்டாள்.

"ஏன் அஞ்சலி இவளோ நேரம். தினமும் உனக்கு இதே வேலையை போச்சு."

"கோவா படதேங்க இளங்கோ வழக்கம் போல அம்மா லேட் பண்ணிட்டாங்க".

"சரி வா ஆட்டோலயே போய்டலாம் அட்லீஸ்ட் உன் கூட கொஞ்ச நேரமாவது ஸ்பெந்ட் பண்ணலாம்."

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். "ஆட்டோ எல் ஐ சி போப்பா" இளங்கோ சொல்ல ஆட்டோ புறப்பட்டது.

"இளங்கோ எப்போ தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது" " அஞ்சலி உனக்கே தெரியும் ஒரு நல்ல வேலை இல்லாமல் நம்ம சென்னைலே வாழ முடியாது."

"இளங்கோ எங்க வீட்டிலே மாப்பிள்ளை பார்க்க தொடங்கிட்டாங்க நம்ம இப்படியே இருக்க முடியாது. சீக்கிரமா நீங்க ஒரு வேலை பாருங்க இல்லேன்னா நம்ம காதலை மருந்தட வேண்டியது தான்."

இளங்கோவுக்கு கோபம் வந்தது. "இத பார் அஞ்சலி எல்லோரை மாதிரி நீயும் இப்படி பேசுவேநு நான் எதிர் பார்க்கலே. நானும் வேலை தேடிட்டு தான் இருக்கேன் ஆனா என்ன பண்றது."

"அப்படினா பேசாம என்னை மறுந்துடுங்க. என்னால எங்க அப்பாவே மீறி ஒன்னும் செய்ய முடியாது இளங்கோ."

பின்னர் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
எல் ஐ சி வந்தவுடன் அஞ்சலி இறங்கி விட்டாள். "இளங்கோ நல்ல யோசிச்சு முடிவு எடுங்க".

இளங்கோ ஏற்கனவே மிகுந்த வேதனை பட்டு கொண்டு இருந்தான். அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அப்பா இல்லாததால் அம்மா மிகவும் சிரமப்பட்டுதான் படிக்க வைத்தாள். ஆனால் இளங்கோவுக்கு படிப்பு நன்றாக வந்துது என்பதால் எப்படியோ ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்து படித்து முடித்து விட்டான். வேலை தான் இன்னும் கிடைக்கவில்லை.

இளங்கோ வீட்டை அடைந்த போது அம்மா வீட்டில் இருந்தாள். "ஏன்மா இன்னிக்கி வேலைக்கு போலையா" " இல்லடா கண்ணு இந்த மூச்சு விட ரொம்ப சிரமமா இருக்குட அது தான் திரும்பி வந்துட்டேன். அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. இளங்கோவுக்கு அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு லச்சம் பணம் தேவை பட்டது. "இந்த பாழா போன வேலை கிடக்கஅலையே என்று தோணியது.

இளங்கோ ஒரு துணை பொறியாளர் வேலைக்கு விண்ணப்பம் போட்டு இருந்தான். அம்மா சொன்னாள் "கோவேர்மேன்ட் வேலை இது கிடைச்சா என் கவலை எல்லாம் போயிடும். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அது நிறுத்தி வைக்க பட்டு இருந்தது.

இளங்கோ வீட்டை விட்டு வெளியில் வந்த நேரம் அந்த பகுதியின் வட்ட செயலர் நின்று கொண்டு இருந்தார். "வாங்க தம்பி. எங்க கட்ச்யில் வந்து சேர சொன்னா சேர மட்ரே. இதோ பார் புரட்சி கருத்து எல்லாம் வாழ்கைக்கு ஒத்து வராது. ஒரு வேலை இருக்கு செய்றியா ரெண்டு லச்சம் தருவாங்க உன் குடும்பத்துக்கு."

இளங்கோ யோசித்தான் இப்போ அந்த பணம் கிடைத்தால் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்யலாம். சரி என்றான். "என்ன வேலை". அவர் கூறியதாய் கேட்டு அதிர்ந்தவன் அம்மாவின் ஆபரேஷன் நினைவுக்கு வர ஒத்து கொண்டான்.

அந்த கட்ச்யின் தலைவரை கைது செய்து விட்டார்கள். அதை எதிர்த்து ஆளுநர் மாளிகைக்கு உர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த கூட்டத்தில் முதல் ஆளாக இளங்கோ.

அம்மா இளங்கோவை தேடி கொண்டு இருந்தாள். பக்கத்து வீட்டு கோபாலிடம் கேட்டாள். " ஏன்பா கோபாலு என் புள்ளைய பாத்தியா. இல்லைமா." "
"எங்க போய்ட்டான். போஸ்ட் மேன் தூரத்தில் வருவது தெரிந்தது. வாப்பா என்ன அம்மா கேட்க
போஸ்ட் மேன் சொன்னான். உன் புள்ளைக்கு வேலை வந்திருக்கு. அந்த துணை பொறியாளர் வேலை வந்து இருந்தது. " அம்மா இளங்கோவுக்கு பிடித்த பால் பாயசம் வைக்க அடுப்பை பற்ற வைத்தாள்.

அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இளங்கோவை காணவில்லை. அங்கே ஆளுனர் மாளிகை முன் பெரிய கூட்டம் கூடி இருந்தது. " தலைவரை விடுதலை செய் !!!!!!!
தலைவரை விடுதலை செய் !!!!!!! தலைவரை விடுதலை செய் !!!!!!!" . திடீர் என இளங்கோ கூடத்தின் முன்னே வந்தான். கையில் ஒரு பெட்ரோல் கேனுடன். நிமிட நேரத்திற்குள் பெட்ரோல் முழுவதும் தன் மீது ஊற்றி கொண்டவன் தீபெட்டியை எடுத்து பற்றவைத்தான். பெட்ரோல் இளங்கோவின் உற்ற நண்பன் போல திபு திபு என எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. இளங்கோ கரி கட்டையாய். வீட்டில் அம்மா வைத்த பால் பாயசம் கொதித்து கொண்டு இருந்தது.




பி.கு : இந்த செய்தியை அறிந்த மாலதி குற்ற உணர்வால் பைத்தியம் ஆகி விட்டாள் .

சாரிங்க ரொம்ப சோகமான கதை தான். ஆனா ஏழைகளுக்கு எல்லாம் காதல் ஒரு சாப கேடு தான். அதனால தான் காதலர் தினத்தில இப்படி ஒரு கதை.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

தமிழ் இழம் காப்போம்


இலங்கை பற்றி எனக்கும் சில வார்த்தைகள் எழுத வேண்டிஇருக்கிறது. என் மக்கள் அங்கே படும் பாடு சொல்லி தெரிய போவதில்லை. நம் இந்திய தேசம் நினைத்து இருந்தால் இந்த இன படுகொலையை எப்பொழுதோ தடுத்து இருக்கலாம். ஆனால் இப்போது இங்கு ஆளும் காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்த்யின் படுகொலைக்காக என் மக்களை பழி வங்கி கொண்டு இருக்கிறது. ஒரு தனி மனிதரின் மரணத்துக்காக அப்பாவி மக்கள் இலங்கையில் கொல்லபடுவதும் நம் இந்திய அரசு அதை மறைமுகமாய் ஆதரிப்பதும் வேதனையான ஒன்று.

தமிழ் இன தலைவர் என மார் தட்டி கொள்ளும் திரு.கருணாநிதி தன் பதவி ஆசைக்காக காங்கிரஸ் அரசை எதுவும் கேட்பதில்லை. நம் முன் கபட நாடகம் ஆடி கொண்டு தன் இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் காங்கிரஸ் அரசை அடி பணிய வைத்து இருக்கலாம். கேவலம் தன் குடும்ப நலனுக்காக இலங்கை தமிழரின் வாழ்கையை காங்கிரஸ் அரசிடம் அடகு வைத்து விட்டார் இந்த தமிழ் இன தலைவர். இது இன்னும் சிலர் இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறரர்கள்.

ஆக மொத்தம் தமிழ் இனம் அழிந்து கொண்டு இருக்க இந்த தன்னிகர் இல்லா தலைவர்கள் இதை அவரவர் சூழ்நிலைகேற்ப உபயோக படுத்தி கொள்கின்றனர். இது போன்ற தலைவர்களை வைத்து கொண்டு நாமும் தமிழ் இனம் அழிவதை பார்த்து கொண்டு கை பிசைந்து கொண்டு தான் இருக்க போகிறோம்.

சில புத்திசாலிகள் இதை கஷ்மீர் பிரச்சினையோடு ஒப்பிடுகின்றனர். கஷ்மீர் பிரச்சின்னையின் அடிபடையே வேறு. இது அவர்களக்கு எப்படி சொன்னாலும் புரிய போவதில்லை. உண்மையை சொன்னால் காஷ்மீரில் அதன் குடி மக்கள் யாரும் வசிக்கவில்லை. அவர் அனைவரும் புலம் பெயாந்து வேறு மாநிலம் சென்று விட்டனர். மிச்சமுள்ள முஸ்லீம் மக்கள் திவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை எதிர்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு ராஜீவ் கொலைக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அழிப்பது எப்படி சரியாகும். தவிர விடுதலை புலிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது. அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு பிரபாகரனை ஒரு ராணுவ தளபதியை விட்டு பிரபாகரனின் முதுகுபுறம் சுட சொன்ன ராஜிவை அவர்கள் கொன்றது தவறில்லை தான் அவர்களை பொறுத்த வரை. ஆனால் நமக்கு அது நியாயம் இல்லை தான். அதற்காக இலங்கை தமிழ் மீது முழுவதும் தாக்குதல் நடப்பதை நம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் ஒன்று திரண்டு இதை எதிர்க்கத்தான் வேண்டும்.

தமிழ் மக்களே குரல் கொடுங்கள். நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிதந்தை செய்வோம். தயைவு செய்து தீகுளிபதும் உயிர் நீப்பதும் இதற்க்கு முடிவல்ல. நம் கோரிகையை எல்லா இடங்களுக்கும் பரப்புவோம். இலங்கையில் போர் நிறுத்தம் வர பாடுபடுவோம் நம் மூச்சுள்ளவரை.

வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.